Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்னார்குடியில் மாணவிகள் 11 பேருக்கு கொரோனா

மார்ச் 10, 2021 01:14

திருவாரூர் : மன்னார்குடி அரசு பள்ளி  மாணவிகள் 11 பேருக்கு கொரோனா  தொற்று  உறுதியானதையடுத்து மற்ற மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில்  மாவட்டத்தில்  மொத்தம் 50க்கும் மேற்பட்டோர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள  அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி விடுதியில்  தங்கி படிக்கும்   4 மாணவிகளுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதனைதொடர்ந்து மற்ற மாணவிகள் 422 பேருக்கு கொரோனா  தொற்று பரிசோதனை செய்யபட்டதில் மேலும் 11 மாணவிகளுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் அனைவரும்   மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்