![](admin/uploads/.5c5183b5009a75.91702562.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெரம்பலூர் : ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பாடாலூரில் நடைபெற்றது.தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% திமுக வெற்றி பெறுவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாடாலூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான சோமு.மதியழகன் தலைமை வகித்தார்.
இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆலத்தூர் மேற்கு பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து வாக்குச்சாவடி முகவர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அணி உறுப்பினர்கள், ஊராட்சி கிளைச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.