Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உடைக்கப்பட்ட பெரியாரின் தலை ஒட்டும் பணி தீவிரம்

ஏப்ரல் 09, 2019 05:18

புதுக்கோட்டை:  அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில், திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் முழு உருவச் சிலையின் தலை மர்மநபர்களால் உடைக்கப்பட்டு தலை தனியாக கீழே கிடந்தது. 
 
இதை பார்த்த தி.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் திரண்டு சாலை மறியல், காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அனைத்துக் கட்சினரும் திரண்டதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால் அந்த இடத்தில் பரபரப்பு எற்பட்டது. 

அதன் பிறகு சிலையை உடனடியாக சீரமைத்துக் கொடுப்பதுடன் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்வது என்று தாசில்தார் மெய்யநாதன் எம்.எல்.ஏ. வுக்கு எழுதிக் கொடுத்தால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு சிலையை சீரமைக்க சுவாமிமலையில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு உடைக்கப்பட்ட பெரியாரின் சிலையை ஒட்டும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர்.  

 

தலைப்புச்செய்திகள்