Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விருதுநகர் தொகுதியை  மக்கள் நீதி மையத்திற்கு ஒதுக்கவிட்டால் ராஜினாமா: காளிதாஸ் பேட்டி

மார்ச் 13, 2021 06:48

விருதுநகர்: மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணியில்  விருதுநகர் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய போவதாக மக்கள் நீதி மய்ய விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் பேட்டியளித்தார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் விருதுநகர் தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் விருதுநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நகர ஒன்றிய மாவட்ட சார்பணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுபரிசீலனை செய்து மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் விருதுநகர் மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர ஒன்றிய நிர்வாகிகளும் ராஜினாமா செய்யப் போவதாக மக்கள் நீதி மய்ய விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்