Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா தொற்று

மார்ச் 16, 2021 06:35

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,09,831 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 131 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,856 ஆக உயர்ந்துள்ளது.

 
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,27,543 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20,191 பேர் குணமடைந்துள்ளனர்.நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,23,432 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 3,29,47,432 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்