Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினகரன் நிற்பதுபோல் நினைத்து வெற்றி பெற செய்ய வேண்டும்

மார்ச் 16, 2021 09:32

தூத்துக்குடி : சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி சார்பாக போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ் எஸ் சந்திரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பிரைடர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து தேமுதிக சார்பில் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் எஸ் சந்திரன் போட்டியிடுவார் என கட்சியின் தலைமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கூட்டணி கட்சியின் வேட்பாளரான எஸ் எஸ் சந்திரன் அறிமுக கூட்டம் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரைடர் தலைமை தாங்கி கூட்டணி கட்சி வேட்பாளர் எஸ் எஸ் சந்திரனை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசும்போது, தூத்துக்குடி  சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் எஸ் எஸ் சந்திரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.  இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக டிடிவி தினகரன் அமர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் எஸ் எஸ் சந்திரன்  இந்த தொகுதியில் டிடிவி தினகரன் நிற்பதுபோல் தன்னை நினைத்து அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

தலைப்புச்செய்திகள்