Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகர்கோவில்:கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தேர்தல் அதிகாரி கலெக்டர் அரவிந்திடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இதற்காக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் நிர்வாகிகள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் மாவட்ட தலைவர் தர்மராஜ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் சென்று பொன். ராதாகிருஷ்ணன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.