Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மை விரலுடன் செல்பி எடுத்தால் ரூபாய் 7000 பரிசு

ஏப்ரல் 09, 2019 06:16

மிசோரம்:  மிசோரம் மாநிலத்தில் கடந்த தேர்தலில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவானதை அடுத்து தற்போது இம்மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. 

இந்நிலையில் "இளம் வாக்காளர்களை" கவரும் வகையிலும் , வாக்கு பதிவுகள் அதிகரிக்கும் வகையிலும் மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று தனது மாநில தேர்தல் டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியீட்டார்.  

இதில் மிசோரம் மாநில மக்கள் தேர்தல் நாளான ஏப்ரல் 11 தேதி அன்று "வாக்களித்த பின் மை விரலுடன்" தனியாகவோ அல்லது குழு புகைப்படமாகவோ எடுத்து "மிசோரம் தேர்தல் அதிகாரி" டிவிட்டர் பெயரை டேக் செய்தும்  என்ற பெயரை ஹேஸ்டேக் செய்து புகைப்படத்தை பதிவிட வேண்டும். 

அவ்வாறு செல்பி புகைப்படத்தை பதிவிடும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ரூபாய் 7000 ஆகவும் , இரண்டாம் பரிசாக ரூபாய் 3000, மூன்றாம் பரிசாக ரூபாய் 3000 வழங்கப்படும் என மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் "மை விரலுடன்"  எடுக்கப்படும் செல்பி புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பிலும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாட்ஸ் ஆப் எண் 90893-29312. அதனை தொடர்ந்து செல்பி புகைப்படத்தை  இன்ஸ்டாகிராமில் பகிரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

தலைப்புச்செய்திகள்