![](admin/uploads/.60811d44defb25.50632109.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை :ஆயக்காரன்புலத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் வைக்ககோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து குறுவை நெல் மூட்டைகள் அனைத்தும் ஆயக்காரன்புலம் பகுதியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
அறவை ஆலைக்கு எடுத்துச் செல்லாமல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை திறந்த வெளியில் வைத்ததால் மழையில் நெல்மணிகள் மக்கியும், முளைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்தது போகாமல் நல்ல நிலையில் உள்ள மூட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் வைக்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.