Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி:கொரோனா மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதையடுத்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. நகரங்களைப்போல சிறு நகரங்களிலும் தினமும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.