Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் -சீமான்

மார்ச் 17, 2021 02:01

கடலூர்:கடலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிராசரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: டாக்டர் ராமதாஸ், தொல்.திருமாவளவன், சரத்குமார், கார்த்திக் ஆகியோரது கட்சிகளுக்கு தமிழகத்தில் குத்தப்பட்ட முத்திரை என் மீதும் விழக்கூடாது என்பதற்காகவே சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த நான் கடந்த தேர்தலில் வட மாவட்டமான கடலூரில் போட்டியிட்டேன். அப்போது நான் தோற்கவில்லை மக்கள்தான் தோற்றார்கள்.

தற்போது சென்னையில் போட்டியிடுகிறேன். அனைவரும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்ற நிலையில் நாம் தமிழர் மட்டும் ஏன் தனித்து போட்டியிடுகிறது என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.மக்கள் என்னை கைவிட மாட்டார்கள் என்பதால் 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுகிறோம். வாழ்கின்ற பூமிக்கு அரசியல் செய்யாமல் வணங்குகின்ற சாமிக்கு அரசியல் செய்கின்ற கூட்டம் உருவாகியுள்ளது‌.மண்ணை காப்பாற்ற அரசியல் செய்யாமல் ஒற்றை உயிரினமான மனிதர்களை காப்பாற்ற அரசியல் உருவாக்கப்படவில்லை.

அனைத்தையும் சரி செய்ய ஒன்று மட்டுமே உள்ளது. விவசாயி சின்னத்திற்கு உங்கள் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். விவசாயி சின்னத்துக்கு ஓட்டு நீங்கள் போடுங்கள் உங்கள் நாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன்.உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னம் ஏழைகளின் சின்னம் என கூறுவார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு ஏழை எளியவரின் சின்னம் 2-ம் பணக்காரர்கள் சின்னமாக இருக்கிறது. உண்மையிலேயே ஏழைகளின் சின்னம் விவசாயி சின்னம் மட்டுமே எனவே மக்களாகிய நீங்கள் ஏழை விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று சீமான் பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்