Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரேமலதாவை வெற்றி பெற வைப்போம்- தினகரன்

மார்ச் 17, 2021 02:04

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்கு சென்ற டி.டி.வி.தினகரன், விஜயகாந்தை சந்தித்து பேசினார்.அப்போது அவர் விஜயகாந்துக்கு பூங்கொத்து கொடுத்தார்
இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் தே.மு.தி.க. அலுவலகத்தில் வைத்து தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழக மக்களின் நலனுக்காகவே அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவாகியுள்ளது. தீயசக்தி தி.மு.க.வையும், துரோக கட்சி அ.தி.மு.க.வையும் வீழ்த்துவதே எங்கள் நோக்கமாகும். கூட்டணிக்காக தே.மு.தி.க.வை தேடிச்சென்று பேசியதில் தவறு ஏதும் இல்லை.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்துள்ளது. விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதாவை வெற்றி பெற செய்வோம். தே.மு.தி.க.வுக்காக 42 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்கு பயந்து கோவில்பட்டியில் போட்டியிடுவதாக கூறுவது தவறு என்று தினகரன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்