Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல்: அய்யாக்கண்ணு திட்டம்

மார்ச் 18, 2021 07:44

திருச்சி:  தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நேற்றுஅளித்த பேட்டியில்: 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாக நாங்கள் அறிவித்தோம். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை அழைத்து பேசினார். அப்போது, 'விளை பொருட்களுக்கு 2 மடங்கு விலை தர வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பை திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு 3முதல் 5 லட்சம் வட்டியில்லா கடன் 5 ஆண்டு காலத்துக்கு வழங்க வேண்டும். இளைஞர்களை ஆண்மை இழக்க செய்யும், பெண்களை கருத்தரிக்காமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்யக்கூடாது' என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு செவி சாக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி, திருவையாறு, தளி, திருவண்ணாமலை, திட்டக்குடி என பாஜக போட்டியிடும் ஆகிய 5 தொகுதிகளில் எங்கள் சங்கம் சார்பில் போட்டியிட உள்ளோம். விவசாயிகளின் இன்றைய நிலையை உணர்த்தும் வகையில் நிர்வாண கோலத்தில் சென்று இந்த தொகுதிகளில் எங்கள் சங்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்று அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்