![](admin/uploads/.61593d68745ad6.61999640.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்தமாதம் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பிரசார களமும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
கட்சி நிர்வாகமானது, தங்களது கட்சியினருக்கு எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும், எவ்வாறு களப்பணிகள் ஆற்ற வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அறிவாலயத்தில் திமுக கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்து, முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் நிறைவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.