Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்- ஆணையர்

மார்ச் 18, 2021 12:41

சென்னை:சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.சென்னையில் சராசரியாக 350க்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கிறது. கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது.சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது.சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்று ஆணையர் பிரகாஷ் கூறினார்.

தலைப்புச்செய்திகள்