Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர்களுக்கு கொரோனா

மார்ச் 19, 2021 09:08

புதுச்சேரி: புதுவையில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 52 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இதன் தாக்கம் அதிகரித்தது. 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. அங்குள்ள பேராசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து மாணவிகள் கல்லூரிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்