Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்கு சேகரித்த திமுக வேட்பாளருக்கு பூரண கும்ப மரியாதை..  

மார்ச் 19, 2021 11:24

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சமயபுரம்  நெம்பர். 1 டோல்கேட்  ரவுண்டானாவில் பிரச்சாரம் துவங்கும் முன் அப் பகுதி மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். 
   
அப்போது  ஒரு பெண்மணி தனது 8 மாத கைக் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென வேட்பாளரை கேட்டுக் கொண்டதின் பேரில் , வேட்பாளர் கதிரவனின் மகளான நிவானிப் பெயரையே, அந்த 8 மாத கைக் குழந்தைக்கு பெயர் சூட்டினார். பின்னர் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
   
இதனைத் தொடர்ந்து நெம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார்கோயில், வாளவந்திபுரம்,  பீரங்கிமேடு, திருவள்ளுவர் அவின்யூ, வி.என். நகர், ஆனந்தா நகர், பட்டத்தம்மாள் தெரு , மாருதி நகர், பிச்சாண்டார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று வாக்காளர்களிடம்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்