![](admin/uploads/.5cfde64e4099b6.72242917.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சமயபுரம் நெம்பர். 1 டோல்கேட் ரவுண்டானாவில் பிரச்சாரம் துவங்கும் முன் அப் பகுதி மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
அப்போது ஒரு பெண்மணி தனது 8 மாத கைக் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென வேட்பாளரை கேட்டுக் கொண்டதின் பேரில் , வேட்பாளர் கதிரவனின் மகளான நிவானிப் பெயரையே, அந்த 8 மாத கைக் குழந்தைக்கு பெயர் சூட்டினார். பின்னர் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து நெம்பர் 1 டோல்கேட், பிச்சாண்டார்கோயில், வாளவந்திபுரம், பீரங்கிமேடு, திருவள்ளுவர் அவின்யூ, வி.என். நகர், ஆனந்தா நகர், பட்டத்தம்மாள் தெரு , மாருதி நகர், பிச்சாண்டார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.