Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

234 தொகுதியிலும் திமுக வெற்றி பெரும் - இனிகோ இருதயராஜ் 

மார்ச் 19, 2021 11:25

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து பேட்டியிடுகின்றன. 

இதில் திருச்சி கிழக்கு தொகுதி திமுக விற்கு ஒதுக்கப்பட்டு அந்த தொகுதியில் வேட்பாளராக இனிகோ இருதயராஜ் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சி அரியமங்கலம் கோட்ட  அலுவலகத்தில் தேர்தல்  அலுவலர் கமலக்கண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். உடன் பாலக்கரை பகுதி செயலாளர் மண்டிசேகர் மற்றும் வழக்கறிஞர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,  தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்.  234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  திருச்சி கிழக்கு பகுதி மக்களுக்கு பணியாற்றுவதற்காக திராவிட முன்னேற்ற கழக தலைவர் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்