Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் பேச்சு: அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 10, 2019 05:46

புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநிலம் லட்டூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தேர்தலில் முதன்முறையாக ஓட்டு போடும் மக்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களின் முதல் ஓட்டு, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டாமா?  

புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களுக்காக உங்கள் ஓட்டு இருக்க வேண்டாமா? பயங்கரவாதத்தை அதன் பிறப்பிடத்திலேயே அழிப்பது தான் புதிய இந்தியாவின் கொள்கை என பேசினார். 

இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மஹாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்