Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆறுமாத காலத்திற்குள்  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - கேஎன் நேரு

மார்ச் 20, 2021 12:55

திருச்சி : ஆறு மாத காலத்திற்குள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைத்து தரப்படும் என  கே. என்.நேரு வாக்குறுதிஅளித்தார் திருச்சி  கழக முதன்மை செயலாளரும் திமுக மேற்கு சட்டமன்ற தொகுதி  வேட்பாளருமான கே.என் நேரு  எடமலைப்பட்டிபுதூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பட்டிரோடு, செல்வ நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர் நாகமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று வாக்கு சேரித்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் கும்ப மரியாதை செய்தும்,  ஆரத்தி எடுத்தும் வரவேற்பளித்தனர்.

அப்போது திறந்த வேனில் இருந்து மக்களிடையே உரையாற்றிய அவர், ஒருங்கிணைந்த  பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த  பத்தாண்டுகளாக அதிமுக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளதாகவும், ஆயினும் எவ்வித  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.  பின்னர், திமுக ஆட்சி அமையுமானால் ஆறு மாத காலத்திற்குள் எடமலைப்பட்டிபுதூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்தார். இதன் மூலம், எடமலைப்பட்டி புதூர் பகுதி திருச்சி மாநகரத்தில்  முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறும் என்றும், சாலை வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.

குடிநீர் வினியோகம் எவ்வித தங்கு தடையின்றி சீராக விநியோகம் செய்யப்படும் என்றும்,  பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும் என்றும் கூறிய அவர், தான் செல்லுமிட மெல்லாம் பொது மக்கள் ஏகோபித்த ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். மேலும்,  இந்த பிரச்சாரத்தின் போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்