Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

மார்ச் 20, 2021 01:19

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 189 பேர்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்த மனுக்களின் மீது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கொக்கிரகுளத்தில் உள்ள, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்  பரிசீலனை நடைபெற்றது.

அதில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு,  விண்ணப்பம் செய்திருந்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பால்கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகப்பன் மற்றும் சுயேட்சை வேட்பாளர் மாரியப்பன் ஆகிய, 3 பேர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதனை அறிந்த அந்த வேட்பாளர்கள்  திருநெல்வேலி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கூச்சலிட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு  ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்