Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு : வடமாநில இளைஞர் ஒருவர், துண்டு துண்டாக வெட்டப்பட்டு, உடல் பாகங்கள் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, முத்துமாணிக்கம் நகரில் வடமாநில தம்பதியர் ஒருவரது வீட்டில், போலீசார் இதை கண்டுபிடித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட வாலிபரிடம், ரூ.2 லட்சம் வரை சம்பந்தப்பட்ட தம்பதியர் பணம் கேட்டிருந்ததாகவும், அதனை தரமறுத்ததாலேயே இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.