Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரில் கடத்திய 35 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது

மார்ச் 20, 2021 02:28

திருச்சி:ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.  அந்த காரில் 35½ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கஞ்சாவுடன் காரை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், கம்பம் போச்சம்பள்ளியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 38), தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெய்குமார் (33) என்பது தெரியவந்தது.இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும், 35½ கிலோ கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்