![](admin/uploads/.625f9d91a27ca1.41765415.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களை எய்ம்ஸ் மருத்துவனை இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கினார். இது குறித்து அவர் கூறும்போது, ‘கொரோனா தடுப்பூசிகள் 8 முதல் 10 மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும். ஒருவேளை இன்னும் அதிகமும் இருக்கலாம்’ என்று கூறினார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுமக்களிடம் அதன் மீதான அச்சம் மற்றும் கொரோனா
முடிந்து விட்டது என்ற எண்ணமே பிரதான காரணம் என்றும் அவர் கூறினார். எனவே மக்கள் அவசியமற்ற பயணங்களை இன்னும் கொஞ்ச காலம் தவிர்க்க
வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த கருத்தை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பாலும் ஆமோதித்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயாளர்களிடமே அதிக
உயிரிழப்பு காணப்படுவதாக கூறிய அவர், எனவே இந்த பிரிவினர் தடுப்பூசி போடுவதை தாமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.