Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மார்ச் 21, 2021 08:50

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்