![](admin/uploads/.60978bbb7b90b2.23689155.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி : தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் சார்பாக த.மா.க வேட்பாளர் விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பு அபபோது தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தூத்துக்குடி டூவிபுரம், அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்று தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .அப்போது அவர் பேசும்போது தூத்துக்குடி மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கு பாலவிநாயகர் கோயில் தெருவில் இருந்து 3வது மையில் வரை புதிய சாலை அமைக்கப்படும் மேலும் விவிடி சிக்னல் அருகே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வாக்குறுதியளித்தார்.