Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா பாதிப்பு

மார்ச் 21, 2021 10:30

புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,99,130 உயர்ந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஒரே நாளில் 197 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,755 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,30,288 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 22,956 பேர் குணமடைந்துள்ளனர்.நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,09,087 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாடு முழுவதும்  4,46,03,841 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்