![](admin/uploads/.5d317e395ef6a9.92411121.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:தி.மு.க. கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்களை பா.ஜனதா கூறியுள்ளது. இதை ஒரு புத்தகமாக அச்சிட்டு இன்று வெளியிடப்பட்டது. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி வெளியிட்டார். மத்திய மந்திரி வி.கே.சிங் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அதில், ஈழத்தமிழர்கள் 1.50 லட்சம் பேர் படுகொலைக்கு காரணமாக இருந்தது. உலகமகா ஊழல் செய்து அதற்காகவே டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆட்சி ஜல்லிக்கட்டை தடை செய்ய சட்டத்திருத்தம் கொண்டுவந்தபோது ஆதரித்தது.
நவோதயா பள்ளிகளை தமிழகத்துக்கு வர விடாமல் தடுத்தது. பெயர் அளவில் இந்தியை எதிர்த்துவிட்டு இந்தி பள்ளிகளை நடத் துவது.காவிரி பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டது. தமிழுக்கும், தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும், இந்தியாவின் ஒற்றுமைக்கும் பல வழிகளில் தொடர்ந்து கேடு விளைவிப்பது, என்பது உள்பட 100 காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை தமிழகம் முழுவதும் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் கரு. நாகராஜன், வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.