Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூரண மதுவிலக்கு பற்றி ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம்- ஆ.ராசா 

மார்ச் 21, 2021 03:53

புஞ்சைபுளியம்பட்டி:பவானிசாகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் பிரசாரம் செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியதால் பயந்து போய் அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறார்கள்.

பூரண மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம். இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை? என்று அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்