Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் வாக்குகளை விற்றால் ஆட்சியாளர்கள் நாட்டை விற்றுவிடுவார்கள்- சீமான்

மார்ச் 22, 2021 06:53

மதுரை:மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:நாம் தமிழர் கட்சி தமிழர்களை வாழவைக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்களை ஜாதி, மதத்தால் திராவிட கட்சிகள் பிரித்து வைத்துள்ளது. இனியும் அவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் தமிழன் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வேண்டும்.பொங்கல் பண்டிகையன்றும் இலவசத்துக்கு கையேந்தும் நிலையை திராவிட கட்சிகள் ஏற்படுத்திவிட்டன. 

அ.தி.முக.- தி.மு.க. ஆகியவை தெருவுக்கு 2 மதுபான கடைகளை திறந்து வைத்துள்ளன. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்குவோம். உயர் தர மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். அரசு பள்ளி, கல்லூரிகளில் படித்தவருக்கே அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல்வர் முதல் கடைநிலை அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளி,

கல்லூரிகளில் தான் பயிலவேண்டும் என்றும், அரசு மருத்துவ மனையில் தான் சிகிச்சை பெறவேண்டும் என்றும் சட்டம் இயற்றுவோம்.நாம் வாக்குகளை விற்றால் ஆட்சியாளர்கள் நாட்டை விற்றுவிடுவார்கள்.வாக்குகளை விற்பவர்கள் தேச துரோகிகள். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும் என்று சீமான் பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்