![](admin/uploads/.5d8ddd79b52ba0.52359332.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தி பிரச்சாரத்தின் போது ஒட்டம்பட்டி பகுதியில்வயலில் வேலை செய்யும் பெண்களுடன் சேர்ந்து நாற்று நட்டு வாக்கு சேகரித்தார் .சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அதிமுக வேட்பாளர் திருமதி இந்திரா காந்தி துறையூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கானா பாடி ,சிக்கத்தம்பூர், பாளையம், ரெங்கநாதபுரம், நரசிங்கபுரம், பெருமாள்பாளையம் ஆகிய ஊர்களில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
செல்லும் இடம் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து பூக்களால் வரவேற்கின்றனர். அப்போது ஒட்டம்பட்டி காணபாடி பகுதியில் வயல்களில் வேலை செய்யும் பெண்களுடன் இணைந்து நாற்று நட்டார் பெருமாள்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது மாற்று கட்சியான திமுகவில் இருந்து சுமார் 50 நபர்கள் வேட்பாளர் இந்திரா காந்தி முன்னிலையில் அதிமுவில் இணைந்தனர். அவர்களை வேட்பாளர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அப்பொழுதே உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலார் சேனை செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் காமராஜ், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், ஆதனூர் செல்வராஜ்,, முன்னாள் ஒன்றிய சேர்மன் பாலு தங்கவேல், ஒன்றிய இணைச்செயலாளர் பொன்னர் வைரிச்செட்டிபாளையம் ராஜேந்திரன் கலிங்க முடையான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி முருகையா , வேங்கை முருகையா கவிதைமணி அண்ணா தொழிற்சங்கம் பிரகாஷ், மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.