![](admin/uploads/.5fc9e15218be49.36278259.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி:திருநெல்வேலியில் சிவராம் கலைக்கூடத்தின் சார்பில் அழகிய ஓவியங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும், நூறு சதவிகிதம் வாக்குப்பதிவை இலக்காக கொண்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தினசரி நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டின், எந்த ஒரு மாவட்டத்திலும், இல்லாத வகையில்,
விழிப்புணர்வு காட்சிகள் மற்றும் வாசகங்களை உள்ளடக்கிய, வண்ணமிகு ஓவியங்கள் மூலம், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருநெல்வேலி சிவராம் கலைக்கூடம் சார்பில் அதன் மாணவ, மாணவிகள், நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களுடைய கரங்களில் ஓவியங்களை பிடித்தபடி, ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு, மனிதச்சங்கிலி அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த புதுமையான நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.