Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சோழிங்கநல்லூர் தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

மார்ச் 23, 2021 07:36

சென்னை:தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில்லை. இதனால் கொரோனா எளிதில் பரவுகிறது.இதில் வேட்பாளர்களும் பாதிப்புக்குள்ளாவது அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மக்கள் நீதி மய்யம் சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்ட சந்தோஷ்பாபு, அண்ணாநகரில் போட்டியிட்ட பொன்ராஜ், சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்டு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் கொரோனாவால் முடங்குவது கட்சி நிர்வாகிகளை சோர்வடைய வைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்