Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

மார்ச் 23, 2021 07:37

ஈரோடு:தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேப்போன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரவு 7 மணியளவில் சித்தோட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்