Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கபடி போட்டியின் போது கேலரி சரிந்து 60 பேர் காயம்

மார்ச் 23, 2021 07:44

சூர்யாபேட்டை:தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை பகுதியில் 47-வது ஜூனியர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது சூர்யாபேட்டை மாவட்டத்தின் கபடி சங்கத்துடன் இணைந்து தெலுங்கானா கபடி சங்கம் இந்த நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டிகள் மார்ச் 25-ம் தேதி வரை சூர்யாபேட்டையில் உள்ள எஸ்பி அலுவலக மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கபடி போட்டியின் போது ரசிகர்கள் அமரும் கேலரி சரிந்ததால் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.கபடி சாம்பியன்ஷிப் போட்டிகளில்  29 மாநிலங்களைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்