Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாளையங்கோட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

மார்ச் 24, 2021 04:53

திருநெல்வேலி :பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை, ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றிபெறச் செய்ய வேண்டும் என  தி.மு.க.மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றுள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு தொகுதிகளில், தி.மு.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மீதமுள்ள ஒரே ஒரு தொகுதியான நாங்குநேரியில், காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்நிலையில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த, தி.மு.க.மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி,ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின்   நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற, செயல்வீரர்கள் கூட்டம், 

பாளையங்கோட்டை வட்டம், மார்க்கெட்திடல் அருகில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் பணிகளை பொறுத்த வரையில்,  அர்ப்பணிப்பு உணர்வுடன், அனைவரும் ஒற்றுமையுடன்  உழைத்து, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி, தி.மு.க.வேட்பாளர் அப்துல் வகாப்பை, ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று இந்த கூட்டத்தில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேட்பாளர் அப்துல் வகாப்பும் இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தலைப்புச்செய்திகள்