Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமேதியில் குடும்பமாக சென்று ராகுல் மனுதாக்கல்

ஏப்ரல் 10, 2019 07:39

புதுடில்லி : காங்.தலைவர் ராகுல், தனது சகோதரியும் பிரியாங்காவின் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்று அமேதி தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்தார்.காங். தலைவர் ராகுல் கடந்த வாரம் கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திறந்த வாகனத்தில் தனது சகோதரியும், உ.பி., கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வாத்ரா, மகன் ரேய்ஹன், மகள் மிரயா ஆகியோருடன் ஊர்வலமாக சென்று, வேட்புமனுவை தாக்கல் செய்தார். ராகுலின் தாயும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா, ராகுலுக்கு முன் காரில் சென்று அமேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். 




 

தலைப்புச்செய்திகள்