Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் இந்த தேர்தல்  - டிடிவி தினகரன்

மார்ச் 25, 2021 02:58

வேலூர்:வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது.இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் இங்கு வசிக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையாக வாழ தமிழின துரோகிகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். சமூக நீதி, சுயமரியாதையுடன் வாழவும், ஊழலற்ற, உண்மையான மக்கள் விரும்பும் ஆட்சி அமைய அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த தேர்தல் தமிழகத்துக்கு திருப்புமுனையாக அமையும் என்று டிடிவி தினகரன்  பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்