Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் ரூ.279 கோடி பறக்கும் படை பறிமுதல்

மார்ச் 26, 2021 05:34

சென்னை:தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, கண்காணிப்புக் குழு, வருமான வரித்துறையினர் உள்ளிட்ட அமலாக்க பிரிவினர் மூலம் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஆதாரங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை அவர்கள் ஒவ்வொரு நாளும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் ரூ.278.73 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள் பரிசுப்பொருட்கள், மது போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன இதில் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.121.98 கோடியாகும்.இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்