Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன் - ராகுல் காந்தி 

மார்ச் 26, 2021 12:54

புதுடெல்லி:காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் தொடர்புடைய இன்ன பிற அமைப்புகளை நான் இனி ‘சங் பரிவார்’ என்று அழைக்க மாட்டேன். ஏனென்றால், குடும்பம் என்றால் அதில் பெண்கள் இருப்பார்கள். பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது அன்பும், இரக்கமும் இருக்கும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இது எதுவும் இல்லை. எனவே அந்த அமைப்பை இனி ‘சங் பரிவார்’ என அழைக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்