Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் கருட சேவை

மார்ச் 26, 2021 12:56

களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 5-ம் திருநாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.நாளை இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 29-ந் தேதி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்