Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பணம் பறிமுதல் குறித்து வழக்குப்பதிவு: வேலூர்

ஏப்ரல் 10, 2019 08:12

வேலூர்: வேலூரில் துரைமுருகன் வீடு, சிமென்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் காட்பாடி போலீஸ் ஸ்டேசனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். 

மேலும், தமிழகத்தில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்