Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணியக்குறிச்சியில்  அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி வாக்குறுதி

மார்ச் 28, 2021 09:35

திருச்சி  : மணியக்குறிச்சியில்  அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி  மயில்கள் சரணாலயம்  மற்றும் ஏரிகளை தூர்வாரி நீர்நிலைகளை நிரப்புவேன் என வாக்குறுதி அளித்தார் திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே புலிவலம், மணியாக்குறிச்சி,பெரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மணியக்குறிச்சியில்  வாக்கு சேகரிக்கும் போது பேசிய அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி

காப்புக்காட்டில் உள்ள மயில்கள்  இங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி் வருகிறது. மேலும் இங்குள்ள சாலைகளில் சுற்றித் திரிவதால்  வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. மயில்களை பாதுகாக்க மயில்கள் சரணாலயம் அமைப்பேன். மேலும் பெரமங்கலத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி நீர்நிலைகளை நிரப்புவேன் என வாக்குறுதியளித்தார்.

மேலும் அவர் என்னை எப்போது வேண்டுமானாலும்  எளிதில் தொடர்பு கொண்டு உங்களது கோரிக்கைகளை கூறலாம். உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் .நான் சாதாரன குடும்பத்தில் பிறந்தவன். என்னை தேர்தலில் வெற்றி பெற  வைத்தால் மண்ணச்சநல்லூர் தொகுதி வளர்ச்சி பெற உறுதுணையாக இருப்பேன் என பேசினார்.இந்த பிரச்சாரத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்