![](admin/uploads/.5dad36d514d4c6.40954933.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பத்தூர் : டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் 1 இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கௌதம் பேட்டை பகுதியை சேர்ந்த அருணாசலம் மகன் சக்தி, தில்லைநகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த அபாய் தெரு பகுதியை சேர்ந்த ஆசிப் மகன் அர்சத் என்ற வாலிபர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.