![](admin/uploads/.5e73597d56bc95.94291335.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை : பிராந்தியங்கரையில், தொழிலாளர்கள் மண் குதிரைகள், சாமி சிலைகள் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை கிராமத்தில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் , கிராமக் கோயில்களில் நேர்த்திக்கடனாக செலுத்தும் மண் குதிரைகள் சாமி சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் கிராம கோயில்
விழாக்களில் பக்தர்கள் நேர்ந்து கொண்டு மண் குதிரைகள் சாமி சிலைகள் வைப்பது வழக்கம். வரும் மாதங்களில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் மண் குதிரைகள் சாமி சிலைகள் செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.இந்த நிலையில் சாமி சிலைகளை செய்யும் பணியில் குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனர்..