Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் வாக்கு சேகரிப்பு

மார்ச் 28, 2021 09:45

புதுக்கோட்டை   : புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுக உரையாற்றி, வாக்கு சேகரித்தார்.வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பெண்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 177 பெண் வேட்பாளர்களுடன், 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அதனையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகமெங்கும் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை, அண்ணா சிலை அருகே நடைபெற்ற அறிமுக விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சசிகுமார், திருமயம் சிவராமன், கந்தர்வகோட்டை ரமீலா, ஆலங்குடி திருச்செல்வம், விராலிமலை அழகுமீனாள், அறந்தாங்கி ஹீமாயூன் கபீர் ஆகியோரை ஒரே மேடையில் அறிமுகம் செய்து, விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:ரூபாய் 100ல் தொடங்கி ஐநூறு, ஆயிரம் என்று ஓட்டுக்கு விலை கொடுத்து, தமிழக மக்களை இரண்டு திராவிட கட்சிகளும் சொந்த மண்ணிலேயே அடிமையாக்கி வைத்துள்ளது.மேலும் அவர்களிடம் உண்மை, நேர்மை என்றுமே கிடையாது. திமுக என்பது ஒரு நோய், அந்த நோயிலிருந்து மீட்கப்பட வேண்டியவர்களுக்காக நான் போராடுகிறேன் இலங்கை தமிழர்களுக்கு எதிராக பாஜக துரோகம் செய்து விட்டது என்று கூறும் காங்கிரஸ் கட்சிதான்.

துரோகத்தின் தொடக்கமே என்று அவர் பேசினார்.முன்னதாக புதுக்கோட்டை வந்த சீமானுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் ஆச்சி மெஸ் கருப்பையா, தொகுதி தலைவர் வே.கு.கருப்பையா, துணைத்தலைவர் பொன் வாசிநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்