Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய வேளாண் சட்டங்களின் நகலை எரித்து   விவசாயிகள் ஹோலி கொண்டாட்டம்!

மார்ச் 29, 2021 12:15

புதுடெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நகலை எரித்து டெல்லியில் விவசாயிகள் ஹோலி கொண்டாடினர்.மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 124 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், ஹோலி பண்டிகைக்காக வட இந்திய மாநிலங்கள் களைகட்டியுள்ள நிலையில், வேளாண் சட்டங்களின் நகலை எரித்து விவசாயிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

டெல்லி எல்லை பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டங்களின் நகலை எதிர்த்து ஹோலி பண்டிகையை கொண்டாடியதாக விவசாய சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு புதிதாக தனிச் சட்டம் இயற்றப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்