Friday, 28th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை: திமுக துணைப் பொதுச் செயலாளர் ராசாவை கைது செய்யக்கோரி வேதாரண்யத்தில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிமுகவினர் ஆண்கள் பெண்கள் என ஒன்று கூடினர். பின்பு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர் ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய ராசாவை கைது செய்யக்கோரியும் திமுக ஒழிக என்று கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வேதாரண்யம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.