Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக சார்பில் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மார்ச் 29, 2021 12:33

திருப்பூர் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயாரை அவதூறாக பேசிய திமுகவின் முன்னாள் அமைச்சர் ராசாவை கண்டித்து நாற்பத்தி எட்டாவது வார்டு ராயபுரம் பகுதி மகளிர் அணி சார்பாக குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜான். தம்பி மனோகர். அர்பன் பேங்க் தலைவர்  சடையப்பன். 48 வது வார்டு கிளைச்  செயலாளர்  ஜேம்ஸ். முன்னால் மாமன்ற உறுப்பினர்  மகளிர் அணி தலைவர் கீதா, முன்னாள் கவுன்சிலர் ருக்குமணி, மாநகரச் செயலாளர் சக்திவேல், தனபால், தாமோதரன் ,அமுதா சுந்தராம்பாள்,

முத்துலட்சுமி,ஐடி விங் லாவண்யா, சுமதி ராணி ,யசோதா மற்றும் பலர் கலந்து கொண்டு ராசாவை கண்டித்து ராசாவை கைது செய்ய வேண்டும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ராயபுரம் பகுதியில் தெற்கு தொகுதி வேட்பாளர் குணசேகரனை  ஆதரித்து வீடு வீடாகச் சென்று, துண்டு சீட்டுகள் வழங்கி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

தலைப்புச்செய்திகள்