![](admin/uploads/.5dcd21edd66251.27308743.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை மாவட்டம் சூர்யா நகரில் நடைபெற்ற 11வது மாநில அளவிலான யோகாசன போட்டியில் கயிற்றின் மீது அமர்ந்தபடி யோகாசனம் உள்ளிட்ட யோகாசன கலைகளை மாணவ மாணவிகள் வெளிப்படுத்தினர்.மதுரை மாவட்டம் சூர்யா நகர் அருகே உள்ள டான்போஸ்கோ பள்ளியில் தனலட்சுமி பராம்பரிய தற்காப்பு அறக்கட்டளை சார்பாக 11 வது மாநில அளவிலான யோகாசன போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சதிஷ்குமார், சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், பாண்டிச்சேரி, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.இப்போட்டியில் மாணவ மாணவிகள் கயிறு மீது அமர்ந்து யோகாசனம், பத்மாசனம், சலபாசனம், தனுராசனம்,திரிகோண ஆசனம், சக்கராசனம் உள்ளிட்ட பல்வேறுவிதமான யோகாசன கலைகளை செய்து திறமைகளை வெளிப்படுத்தினர்.